Showing 1–12 of 42 resultsSorted by latest
செம்பருத்தி பூ உலர்ந்தது – Hibiscus Flower Dried
₹40.00 – ₹75.00Price range: ₹40.00 through ₹75.00சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களூம் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது.
கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது. செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
செம்பருத்தி பூவின் சத்துக்கள்:
❖ இயற்கையான அமிலங்கள்
❖ இரும்பு
❖ பாஸ்பரஸ்
❖ கால்சியம்
❖ வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
செம்பருத்தி இலைகளின் சத்துக்கள்:
❖ 2-3% புரதங்கள்
❖ இரும்பு
❖ கால்சியம்
❖ பாஸ்பரஸ்
செம்பருத்தி பயன்கள்:
❖ அழகு: தலைமுடி பராமரிப்பு, சரும பராமரிப்பு
❖ உணவு: தேநீர், சூப்கள், ஜெல்லி, சாலடுகள்
❖ மருத்துவம்: இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, காய்ச்சல் குணமாகும்.
செம்பருத்தி இதழ்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து குடித்து வர இதயம் பலம் பெறுவதோடு மிகை ரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த மூலிகையாக உள்ளது.
JKB குப்பைமேனி சோப் – JKB Kuppaimeni Soap
Home made bath soap for all types of skin ailments
இலுப்பை எண்ணை – Iluppai ( Mahua) Oil
₹30.00 – ₹250.00Price range: ₹30.00 through ₹250.00இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது. இது நெய் போன்ற தன்மை, அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்டது.
1. எண்ணெயின் பயன்கள்
- மனித உடலின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உடையது.
- நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இந்த எண்ணையை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம்.
- நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி.
- இடுப்பு வலி, மூட்டு வலி, கை, கால்கள் வலி ஆகியவற்றிற்கு இந்த எண்ணையை, சிறிது மென்மையாக சூடேற்றி, அதை தடவி பின்னர் மிதமான வெந்நீரில் சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டால் எளிதில் குணமடையும்.
- ஆண்களுக்கு ஏற்படும் விரை வீக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து. இந்த எண்ணையை சிறிது சூடுபடுத்தி நான்கைந்து முறை தடவி வந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.
- சருமத்தை மிருதுவாக்கும், தோல் சுருக்கங்களை நீக்கும்.
- வாரம் ஒரு முறை நன்றாக உடலில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் இதை கழுவி குளித்து வந்தால், சருமம் பளபளப்பாக அற்புதமாக இருக்கும்.
- விஷப்பூச்சிகள் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி வாய்ந்தது இந்த அற்புதமான எண்ணெய்.
- விஷப் பூச்சிகளின் கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை சரி படுத்தும் தன்மையுடையது இந்த எண்ணெய்.
- கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு போன்றவற்றை எளிதில் குணமாக்கும் தன்மை உடையது.
- குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றிற்கும் இந்த எண்ணெய் அருமையான மருந்து ஆகும்.
- காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சில துளிகளை இந்த எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.
- கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தாலும், சிலருக்கு இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பதாலும் உண்டாகக்கூடிய கண் எரிச்சல், கண் அயர்ச்சி, கண்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது அருமையான மருந்து ஆகும். அதற்கு இலுப்பை எண்ணெயை அடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம்.
- கண்பார்வையும் மிகத்தெளிவாக அமையும்.
- வயிற்றில் செரிமான மண்டலத்தை சீர் அடையச் செய்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை உடையது இந்த எண்ணெய்.
- சில துளிகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காச நோய் கிருமிகளையும் ஆஸ்துமா கிருமிகளையும் அழிக்கும் தன்மை வாய்ந்தது இந்த எண்ணெய்.
- ஆக மொத்தமாக இந்த இலுப்பை எண்ணெய் ஒரு தெய்வீக தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.
புங்கம்பட்டை – Pungam Pattai
₹20.00 – ₹40.00Price range: ₹20.00 through ₹40.00புங்கை மரத்தின் பட்டை எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
கார் / சிவப்பு / பழுப்பு அரிசி – Red Rice
-
உடலுக்கு ஊட்டமளித்தல்:கார் அரிசி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
-
மந்த குணம்:இது மந்த குணத்தை அளிக்கும் தன்மை கொண்டது.
-
உடல் எடை:உடல் எடை அதிகரிக்கவும், வளிக்குற்றத்தை போக்கவும் உதவுகிறது.
-
பலன்:பலத்தை அளிக்கும் தன்மை கொண்டது.
-
இரத்த சோகை:இரத்த சோகை பிரச்சனைகளை தீர்க்கவும், உடல் நலனை மேம்படுத்தவும் உதவுகிறது.
கார் அரிசி அரிசி உணவில் சேர்த்துக் கொண்டால்
உடல் நன்கு உறுதியடையும்.
தோல் நோய் சரியாகும்.
உடல் தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும்.
உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மென்மையாகவும் பட்டுப் போலவும் இருக்கும்.
தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிவப்பு கவுனி அரிசி சிறப்பானது.
தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கபடும்..
சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
கார் அரிசியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
மூங்கில் அரிசி சாப்பிடும்போது, உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது.
ஏதேனும் மருத்துவக் குறைபாடு இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
அவுரி (நீலி) இலைப்பொடி – Neeli Avuri (Indigo) Powder
அவுரி இலை பொடி (Indigo Powder)
நரைமுடியை இயற்கையாகக் கருப்பாக்கவும், முடி உதிர்வைத் தடுத்து முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையைக் குளிர்ச்சியாக வைக்கவும் பெரிதும் உதவுகிறது. இது வேதியியல் சாயங்களுக்குப் பாதுகாப்பான மாற்றாகும். மேலும், இது சருமப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், உடலை நச்சுத்தன்மையிலிருந்து நீக்கவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
- இயற்கை முடி சாயம்: மருதாணியுடன் கலந்து பயன்படுத்தும்போது நரைமுடியை இயற்கையான கறுப்பு அல்லது அடர் பழுப்பு நிறமாக மாற்றுகிறது.
- முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தி: மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைத்து, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
- பொடுகு மற்றும் உச்சந்தலை ஆரோக்கியம்: பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பைக் குறைத்து, குளிர்ச்சியைத் தருகிறது.
- சருமப் பராமரிப்பு: முகப்பரு, தோல் அழற்சி (rashes) மற்றும் அரிப்பு போன்ற சருமப் பிரச்சனைகளுக்குப் பொடியாகப் பயன்படுத்தப்படுகிறது.
- உடல் நலம்: கல்லீரலைப் பாதுகாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலின் நச்சுத்தன்மையை நீக்கவும் (detoxify) இது மருத்துவ ரீதியாகப் பயன்படுகிறது.
- இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும்.
- காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும்.
உடல் பொன்னிறம் பெறும் என்கிறது குணபாடம்! - தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன்படும்.
- நாய்கடி விஷத்தால் ஏற்படும் – ஹைடிரோ போபியாவுக்கு நன்றாக குணம் கிடைக்கச் செய்யும்.
- முடிக்கு: மருதாணி இலை பொடி தடவி காய்ந்த பிறகு, அவுரி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, தலைமுடியில் தடவி 1-2 மணி நேரம் கழித்து அலசவும்.
- உடலுக்கு: பொதுவாக 1-3 கிராம் வரை வெதுவெதுப்பான நீரில் கலந்து உணவுக்கு முன் உட்கொள்ளலாம் (மருத்துவர் ஆலோசனைப்படி).
ரோஜா இதழ் பவுடர் No. 1 – Rose Petals Powder
இது இரத்த பித்தம், காய்ச்சல், வெள்ளைப்படுதலை குறைக்கிறது.
ரோஜா இதழ் No. 2 – Rose Petals
குளியல் சூரணம்,நலுங்கு மாவு மற்றும் ஃபேஷியல் பேக் பவுடர் போன்றவற்றில் மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.
ஜாதிக்காய் – Jaathikkai
Excellent remedy for impotence, diarrhoea, indigestion and insomnia.
எலுமிச்சை தோல் பொடி – Lemon Peel Powder
-
-
சருமம்:எலுமிச்சை தோல் பொடி முகப்பரு, கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் நிறமைகளை குறைக்க உதவுகிறது.
-
வாய்வழி சுகாதாரம்:வாய் துர்நாற்றம் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கு இது இயற்கையான தீர்வாக செயல்படுகிறது.
-
-
நோயெதிர்ப்பு சக்தி:வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
-
இதய ஆரோக்கியம்:இது இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவுகிறது.
-
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்:எலுமிச்சை தோல் பொடி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
-
முகப்பருக்களுக்கு:எலுமிச்சை தோல் பொடி, அரிசி மாவு, பால் கலந்த ஒரு பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவி, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.
-
வாய்வழி துர்நாற்றத்தை போக்க:எலுமிச்சை தோல் பொடியை சூடான நீரில் கலந்து வாய் கொப்புளிக்கலாம்.
-
சருமத்தை மென்மையாக்க:எலுமிச்சை தோல் பொடியை கற்றாழை ஜெல் கலந்த ஒரு பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவலாம்.
- கரும்புள்ளிகளை குறைக்கிறது மற்றும் தோல் வயதானதை எதிர்த்துப் போராடுகிறது.
- உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை காயவைத்த பொடியை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட, உடல் எடை நாளடைவில் குறைய தொடங்கும்.
- இது பெருங்குடல், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- பற்கள், எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம் மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளதால் இவை கண்களை பாதுகாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.
எலுமிச்சை தோல் பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அதிமதுரம் பொடி – Athimathuram Chooranam
-
-
சுவாச கோளாறுகளுக்கு:
அதிமதுரம் பொடி தொண்டை புண், இருமல், சளி, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. இது சளியை தளர்த்தி இருமலுக்கு உதவுகிறது.
-
சரும நன்மைகள்:அதிமதுரம் பொடி அழற்சியைக் குறைத்து, முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், சருமத்தை பிரகாசமாக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
-
-
முடி வளர்ச்சி:அதிமதுரம் பொடி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், முடி உதிர்வதையும், முன்கூட்டியே நரைப்பதையும் தடுக்கிறது.
-
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த:அதிமதுர வேர் பொடியில் உள்ள கிளாப்ரிடின் என்ற கலவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- வயிற்றுப் புண்களை நீக்கும்
வயிற்றுப் புண் பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரம் மற்றும் பால் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதிமதுரத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து உட்கொள்வது அல்சரின் வீக்கத்தைக் குறைத்து, குணமடைய உதவுகிறது.
-
பாலூட்டும் பெண்களுக்கு:தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, அதிமதுரம், பால், பெருங்காயத்தூள் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்
பாலில் அதிமதுரம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கும். பாலுடன் தேனையும் சேர்த்து உட்கொள்ளலாம்.
சிறுநீர் கழிக்கும் பிரச்சனை
அதிமதுரத்தை ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குடிக்கவும். இதை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீர் கழித்தல் தொடர்பான கடுமையான பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
கண்களுக்கு நன்மை பயக்கும்
அதிமதுரம் மற்றும் பால் கலவையானது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உட்கொண்டால் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, அதிமதுரம், பால், பெருங்காயத்தூள் கலந்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலில் 2 கிராம் அதிமதுரப் பொடியைச் சேர்த்து, தினமும் காலை அல்லது மாலையில் குடித்து வந்தால், தாய் பாலூட்டும் பெண்கள் அதிமதுரத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
அதிமதுரம் பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.